Wednesday, February 29, 2012

பாகவத அம்மானை

 '....பெற்றதாய் தந்தைமுன்னாட் பேர் பெறசெய் மாதவமோ
குற்றமில்லா சந்திர குலமுன்செய் மாதவமோ
 உத்தமனட்பரீக  முன்னா    ளுத்தவன்செய்   மாதவமோ
சித்திரப்பொற் றேர்நடத்த தேர்விஜயன் செய்தவமோ
அன்பின் முலையூட்ட  யசோதை மாதவமோ 
நம்பியை  யனென்றழைக்க    நந்தகோன் செய்தவமோ...'



..........  சங்கரமூர்த்தி கோனார்
  
பாகவதஅம்மானையில் கண்ணன் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தசேதி
வருகிறது. அது போழ்து தாம் கொண்ட உணர்வை இங்கு இவ்வாறாக பிரதிபலிக்கிறார் ...'இவன் பிறந்தது இவனை பெற்றவர் முன்னால்    செய்த ,
பெருந்தவத்தின் பேறோ ,    இவன் பிறந்த சந்திரகுலம்  [ரோகிணிக்குரியவன் சந்திர பகவான் ] முன்னால் செய்த   பெருந்தவப் பயனோ , உத்தமர்கள் இவன் நட்பை ,
வேண்டியிருந்த தவவலிமையோ,   பின்னாளில் இவனை தனக்கு அழகிய தேர்பாகனாக்கிக் கொண்டு பாரதம் முடிக்க 
அர்ஜுனன் செய்த தவப்பயனோ,   தன் பாலை,   கண்ணனே   குழந்தையாகி  
குடித்து  வளருதல் வேண்டும் என்று யசோதை செய்த   தவப்பலனோ ,. நந்தகோபன் வாஞ்சையாய் மகனே என்றழைக்க செய்த  தவப்பேறோ இன்று கண்ணன் பிறந்திட்டான் என்று உவகை கொள்கிறார்.
   
 கோதைதனபாலன் ,    

No comments:

Post a Comment