Friday, September 21, 2012

அனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...

அனுபவ முத்திரைகள்:

கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...
: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...


கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமா
கக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள்
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.
 தொடர்ச்சி.... கன்னிமார்கள் தெய்வங்கள் ஏழு 
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் ,கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இரு சுடர்களுடனே வானிலே திரிபவரான முனிவர்க்கும் அமரர்க்கும் இடர் கெடுமாறு அருளுகின்ற இணையற்ற நின் பாதங்களைத் தொழ
ுதேம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்..

என்ற வரிகள் அவை.


ஒவ்வொரு சக்திக்கும் பெயரும் எழுத்தும் மக்கள் அமைத்தனர்.இச்சக்திகள் இசை பாடுவதையும் இவ்விசையிநின்றே உலகம் படைக்கப்படுகிறதென்றும் கண்டனர்.இவ்வாறு யைவனோடு ஒன்றியே நிற்கும் சக்தியை 'ஆ,ஈ,ஊ,ஏ.ஐ,ஓ,ஔ'என்று ஏழு குறியீடுகளாக அமைத்து இவை எழிசையைக் குறிப்பதாக கருதியதுமன்றி,ஏழு சக்திகளையும் ஏழு கன்னிகைக ளாகவும் திருக்கோயில்களில் சிலை அமைத்து வணங்கினர்.இம்மரபிநின்றே வானத்தில் தோன்றும் விண்மீன் தொகுதிக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயர் வந்ததோ எனவும் கருத இடமுண்டாகிறது.உலகத்தில் எங்கும் ஏழு கிழமைகள்தாம் என்பதையும் இங்கு ஒப்பிடலாம்.பின்னர் 'சரி,ரி,க,ம,ப, த,நி'என்ற ஏழு சுவரங்களும் அமைந்தன.
 Pg Ramanan. ..நன்றி.

http://www.harappa.com/script/parpola12.html .....இதில் இது சார்ந்த வரலாற்றுக் கூற்று உள்ளது.

கோதைதனபாலன்
 
அதில் நான் கண்ட விபரம்,மற்றும் நான் அ றிந்தது சொல்கிறேன்.6+1 அருந்ததி என்பது பின்னாளில் ஆரிய கலப்பால் வந்த கதை.முன்னாளில் பரிபாடலில் வரும் அறுவர் என்பது கார்த்திகைப் பெண்களைக் குறிப்பது. செவ்வேள் முருகன் பிறப்பு வளர்ப்பு பாடுகையில் இவ்விளக்கம் வரும்.

முன்னதுக்கு ,சிலப்பதிகாரத்தில் ,'அ றுவருக்கும் இளைய நங்கை...' என்று பயின்று வர இவள் அருந்ததி என அறியலாம். மற்றும் அவர்களினூடே புராணம் சொல்லும் ஆண்தெய்வங்கள் ஏற்றி சப்தமாதர் ஆயிற்று..உருவங்களும் அமையலாயிற்று. ஆனால் நாட்டுப் புறங்களில் போற்றிய கொற்றவையை மட்டும் மாற்ற இயலவில்லை. எனவே அது வன துர்கை என்று வழங்கப் பட்டு நாட்டுப் புறங்களில் நாடு கல் ஊன்றி வணங்கும் வழிபாடே இன்றுவரை நீடிக்கிறது.
 தொடர்ச்சி....   நட்சத்திரம் பற்றி பேசுகையில் சப்தரிஷி மண்டலம் அல்லது கார்த்திகைப் பெண்டிர் நட்சத்திரக் கூட்டம் என்றும் சொல்லுவர். அந்நாளில் துருவ நட்சத்திரம், விடி வெள்ளி இவை அறியப்பட்டிருந்தது.எழும் கன்னிமார் என்று இந்த blog.com..ல் திராவிட முத்திரையோடு அறியப் படுமானால் ஒரு சங்கதியை பகிர்ந்து கொள்கிறேன். பண்டைய ஜோதிட நூலில் ஏழு கிரகங்களே பேசப்பட்டன. ராகு,கேது என்பது இல்லை. பின்னாளில் இந்த இரண்டிற்கும் பிரத்யேக வல்லமையான அமைப்பு தந்து நவ கோள்களாக வர்ணிக்கப் பட்டாலும் இவை இரண்டும் கோள்கள் ஆகா. ஏழு கிரகங்களே உண்மை. மற்றும் 27 நட்சத்திர வரிசை மாறி இருந்தது. கார்த்திகை தொடக்கமே அவை சொல்லப்பட்டு பரணி இறுதியாக வைக்கப்பட்டது. இதை துருவ நாடி பேசும்.சத்யசாரியார் எழுதியது. பின்னாளில் இந்த முறையும் மாற்றி வைக்கப் பட்டுள்ளது.அசுபதி தொடங்கும் நிலை ரேவதி இறுதியாக இன்றளவும்நடை முறையில் உள்ளது.கோதைதனபாலன் 

Photo: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமாகக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள் 
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.

Wednesday, September 19, 2012

அனுபவ முத்திரைகள்: பிள்ளையார்

அனுபவ முத்திரைகள்: பிள்ளையார்: பிள்ளையார் ! இந்தப் பிள்ளை யார் ? மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத...

பிள்ளையார்



பிள்ளையார் ! இந்தப் பிள்ளை யார் ? மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத்தும் ஞான பூமிதான் இந்த பாரதம். திருவிழாவோ, பண்டிகையோ சொல்லி நாம் புதுசு அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் பிள்ளையாண்டனுக்குத்தான் எத்தனை எத்தனை விதமான படையல்கள்; அலங்காரங்கள்; இனிய வரலாறுகள்; அருமையான பாடல்கள்! ஒவ்வொரு விருப்பத்திற்கும் உண்டான தெய்வங்கள் பல உண
்டு; ஆனால் விருப்பப்படியெல்லாம் அழைக்கப்படுபவன் இவன் ஒருவனே. அருளும் விதமோ ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். இவனுக்கென்று கோயில் கேட்கமாட்டான். கட்டும் கோயில்களில் எல்லாம் ஒரு சிறு பங்கு வாங்கிக் கொள்வான். ஆத்தோரம் கண்டால் விடமாட்டான்; அங்கேயே ஒரு அரசமரமோ,ஆலமரமோ கண்டு யோகமூர்தியாய் உட்கார்ந்து விடுவான். தினம் ஒரு குடம் தண்ணீர் ஊற்றச்சொல்லியே மனம் குளிர்வான்,வேண்டும் வரம் தருவான். அதோடு விடுவானா, மலையைக் குடைந்தும், அதன் உச்சி மீதும் அமர்ந்து கொள்ளும் உச்சிப் பிள்ளையார் இவன். இவனை சைவமோ,வைணவமோ முழு உரிமை கொண்டாடாதபடி பாதுகாத்துக் கொள்வதில் தந்திரகாரன்; சமர்த்தன். சிவத்தலங்களில் நெற்றிப் பட்டையோடு எப்பொழுதும் காட்சி அளிப்பவன் அழகர் கோயிலில் நெற்றியில் ராமத்துடன் காட்சி அளிப்பான். குறைகளை இவனிடம் சொல்லப் போனால் தனது பார்வையாலே நம் குறைகளை ஒரூ கணம் மறந்து விடச் செய்யும் உன்னத தெய்வம் இவன்! பெரும் வயிறு கொண்ட இந்த யானை முகத்தோனுக்கு ஒரு சின்ன எலி வாகனமாம். வேடிக்கையான கலியுக விந்தை தெய்வம் இவனே. தொட்டது துலங்க பிடித்து வைக்கும் மஞ்சள் பிடிப்பிலும் எழுந்தருளி காட்சி தருபவன், அருள் புரிபவன் இவன் ஒருவனே ! இந்த ஞான சித்து விளையாட்டு கொண்ட தெய்வத்தை இந்த நன்னாளில் நாம் இனிதே உள்ளம் குளிர்ந்தே வணங்குவோம்.


கோதைதனபாலன் சுய அனுபவம்: 



இன்று ஊரே கோலாகலமாய் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி விழாவில்
ஞான மூர்த்தி பிள்ளையாரின் சித்து விளையாட்டு ஒன்று, என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்து விட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய , தவறாது மந்திரம் சொல்லி, விரதம் கடைப்பிடிக்கும் பக்தை அல்ல. சாதாரணமாய் சிறு வயதில் வெள்ளிக் கிழமையானால் பிள்ளையார் கோயிலுக்கு அம்மாவின் கட்டளைப் படி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி வந்திருக்
கிறேன். பிள்ளையார் சுழி போட்டு எதையும் எழுதத் தொடங்குவேன். மற்றபடி ஒரு தெய்வத்தின் மீது பயத்துடன் கூடிய ஒரு பக்திக்கு மேல் பெரிதான காரியங்கள் நான் செய்ததில்லை. இப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன்னால் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு ஏதாவது என்னால் ஆனது செய்யலாம் என்ற எண்ணத்தோடு, ஆசை மேலிட கோயிலுக்குச் சென்றேன். அர்ச்சகரிடம் பணிவாக என் விருப்பத்தை சொல்லலானேன். ‘கோயிலில் எல்லாம் வேண்டுவன வைத்திருப்பீர்கள்; இருந்தாலும் நானும் ஒன்று பிள்ளையாருக்கு வாங்கி வைக்க ஆசைப் படுகிறேன். பூஜை சாமானம் ஏதும் குறிப்பிட்டது வேண்டுமா’ என்று கேட்க, அவர், ‘வேண்டாம் அவையெல்லாம் இருக்கிறது.’ ‘சரி, அப்போ அலங்காரத்துக்கான வெள்ளியிலான பொருள் வேண்டுமா ‘ அவையும் வேண்டுமளவு உள்ளது.’ ‘கண்கள், தந்தம் இந்த உறுப்புகளுக்கான வெள்ளி
அணிகலன் வாங்கித் தரலாமா/’... ‘எல்லாமே இருக்கிறது.’ என்றார். நாங்கள் குழம்பி விட்டோம். ‘சரி என்னதான், ஏதாவது சொல்லுங்கள் முடிந்ததைச் செய்கிறோம்;, என்று கேட்க அவர் சொன்னது என்னையும் என்னுடன் வந்தவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் சொன்னது, ‘விக்கிரகத்திற்கு சாற்ற துணி இல்லை, திரையும் இல்லை; அவற்றை வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள்’ மனதிற்குள் சிரிப்பு மேலிட்டாலும் மனமகிழ்ந்து அவரிடமே அளவு கேட்டு ,மறுநாள் இரண்டையும் வாங்கிக் கொடுத்து வந்தோம். தையல் கூலியும் நாங்களே தருவதாகவும் சொல்லி பொறுப்பை அவரிடமே விட்டு விட்டு பிள்ளையாரை வணங்கி வந்தோம். பின்னர் அந்த வார இறுதியில் ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன் ,கோயிலுக்குச் சென்று உள்ளே ஒரு வலம் வரும்போது எங்கள் நெஞ்சம் விம்மியது. அது ஒரு வகை பரவசத்தால். ஆமாம், அன்று அங்கிருந்த பிள்ளையார் மட்டுமல்ல, ஆஞ்சநேயரும் ,முருகரும், துர்க்கையும் நாங்கள் தந்திருந்த துணியினால் ஆன அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். ஒரு தெய்வத்திற்கென்று நினைத்துச் செய்ய, ஏனைய பரிவார தெய்வங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றிருந்த காட்சி, பிள்ளையாரின் திருவிளையாடல்தானே!
அவனது ஞானத்தின் பெருமையை அவன் , அன்று எங்களை உணர வைத்தான்.