Wednesday, May 30, 2012

அனுபவ முத்திரைகள்: .....திருவாசகம் எண்ணப்பதிகம்

அனுபவ முத்திரைகள்: .....திருவாசகம் எண்ணப்பதிகம்: தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமா ரெமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்றன் குறிப்பே குற...

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமா ரெமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
...
போமாற மைமின் பொய்நீக்கிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே
.

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தனக்குத் தானே என்றானவன். தானே தனக்கு சுற்றம் என்றானவன்., தனக்கு தானே விதி கொள்பவன் ஆக இவன் மீது பாசம் கொண்டவர்தான் எத்தனை பேர்! எல்லாம் மாயம். அது போகட்டும்; எம் பெருமான் குறிப்பு எதுவோ அதையே தங்கள் வழி நடப்பாய் கொண்ட பழைய அவனது தொண்டர் வழி நம் பாதை அமைத்து, பொய்களை அறவே விட்டொழித்து அனைவரையும் ஆளும் அவன் பொற்பாதம் பற்றியிருப்போம்.
 

Wednesday, May 9, 2012

அனுபவ முத்திரைகள்: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழக...

அனுபவ முத்திரைகள்: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழக...: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழகுறச் சொல்லி மதுரை நோக்கி வரும் பாங்கு வர்ணிப்பு பாடலில்.... ...கரியமால் அப்பனே ! விண்ட...
அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழகுறச் சொல்லி மதுரை நோக்கி வரும் பாங்கு வர்ணிப்பு பாடலில்....

...கரியமால் அப்பனே !
விண்டார்கள் தொண்டரெல்லாம் அழகர் புரிக்கண்ணன் விமலன் அவர்கள் தன்னை
வணங்கிடுவீர் நீங்களெல்லாம் கேந்திரபாலர் ...
முதல் வடக்குக் குடவரையில்
கலக்கமில்லாப் படிவாசல் நெய்வேத்திய பூசை கற்பூர தூபதீபம்
துலக்கமதாய்க் கொடுத்து மூன்று காலைவேளை தொகுதிப்படி முறையாய்
..................... பட்டர் முதல் ஆண்டாரும் நாட்டார்க்குரைக்கப் பணிந்து நமஸ்கரித்து
கட்டணம் தவறாமல் நடக்கிறோமெந்த நாளும் கருவலமே என்றுரைத்து
எல்லோரும் கோவிந்தா என்று பொய்கைகரைபட்டி ஏகினார் பட்டர் முதல்
சென்று திரும்பிவரப்பரமசமிப் பட்டரிடம் செப்புவார் செந்திருமால்
வாமனரே வைகைவலம் நாளைப் பயணம் வைக்கலாம் தென் கூடலுக்கு
நேம விதிப் படியே நான்கு கோட்டை வாசலுக்குள் நேமியும் பன்முறை போய்
உள்கோட்டை வாசலிலே ஆழ்வார் கருடாழ்வார் உடையாழ்வார் காவலுடன்
செல்வதற்குள் மடப்பள்ளி திருப்பரிச்சி முதலாக திருமால் அவர் காவல் என்றார்
கருமண்டபமும் களஞ்சியம் காணிக்கைக் குடவரையுள் கல்படியோன் காவலேன்றார்
திருமாலுடைய தொட்டிபட்டி அயராமணி மண்டபம் சுரங்க முதலாச் சித்தர்கள் காவலேன்றார்
மறுகுமலரணிந்த மாதவன் சொற்படியே வாமணன் கட்டளையில்
வருமலர் இணைமாற்றித் தீர்த்தமதை வழங்குகின்ற மஞ்சனையாள் பேராக்கு
பெருகும் படையோடுள்ளிச் சமர்முடித்து வந்த சித்தர் பிரான் மலையை
காத்து வருவீரெல்லாம் வற்றாமல் தீர்த்தம் கலங்காமல் ஈயெறும்பு
காவலுடன் நானிருப்பேன் ரகுபூபதியே நீங்கள் வைகை நதி போங்களென
ஆவலுடன் செங்கமலன் மஞ்சன நதி ராக்குரைக்க திருமாலும்
தாமோதரக் கண்ணன் தானமலர்த் தண்டியலைத்தான் தூக்கி வாருங்கள் என்றார்
போய்வரேன் என்று சொல்லி சேவகரும் மாறனைமைக்காரரும்
பல்லக்கைத் தூக்கி பட்டர் வலம்புரிச் சங்கூதிடவே
நாட்டார்கள் கொம்பூத செகண்டி நாதம் நாலு திக்கும் நாள் முழங்க
கோர்த்தார்கள் கூடிவர காட்டுப் பிள்ளையாரிடத்தில் கூறிய சேதிகளை
நடந்தார் பெருமாளும் போய்கைக்கரைபட்டி கலவை நதியும் நல்லதென்று கடந்து.................
 

அனுபவ முத்திரைகள்: அழகர் வர்ணிப்பு பாடல்.

அனுபவ முத்திரைகள்: அழகர் வர்ணிப்பு பாடல்.: அழகர் வர்ணிப்பு பாடல். .........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில் பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன் அங்கு மானிடர்க்கு கா...

அழகர் வர்ணிப்பு பாடல்.

அழகர் வர்ணிப்பு பாடல்.


.........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில்
பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன்
அங்கு மானிடர்க்கு காட்சியுமே தானீந்து
அளித்துப் பதவியும் மானிடர்கள் சூழ
...
யானைத் திரள் முன்னடைக்க ஜொலிக்க
குடைகருட்டி சங்கு நாதத்தோடு திருமாலும் வைகையிலே
வண்ணமலர் சொரிய விண்ணில் அரும்பெரிய மாலழகன் திருத்தோளில்
அந்த நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் மாலையினை அணிந்த கார்மேகம்
பவளவர்ணப் புரவிதன்னை வளனதிக்குப் பகவானும் சூழ்ந்திடவே
குவலயத்தோர் கொண்டாட அம்பிகை மீனாள் கும்பிட் டடிபணிய
சிறப்பளிக்க திருவரதன் உள்ளமதில் எண்ணி செப்புவார் தங்கையருக்கு
வைகைநதி மேல்சார்பை அம்பிகைக்கு சீர்வரிசை மாதவனும் அங்கு தந்து
பையறவன் சங்கரர்க்கு வளனதியைப் பாதி பகிர்ந்துமே கீழ்முகமாய்
வடகரையில் புரவிதன்னைச் சூழ்ந்து தென்கரையைத் திரும்பியே மாதவையர்
பால் அபிஷேகம் தர வாங்கியருந்தி பச்சைமால் இச்சையுடன்
நால்வேத வாத்தியங்கள் ரங்கநாதபுரம் திருக்கண் கண்டு நாதனவர் உள் நுழைய
ஐதீகம் மாறாமல் ஷராபு நாயக்கர் கட்டளையில் அனந்தனும் தங்கியிருந்து
இழுத்த கடிவாலமத்தை சுண்டின வேகத்தால் எழுந்ததாம் மாந்தேசி..
குலுக்கிக் குமுரியதாம் முத்துச் செட்டி மண்டபம் கொட்டகைக்குள் பொய் நுழைய
தூத்தினார் பூமலரை எங்கோமான் மேற்ச்சொரிய துடிக்குதாம் மாந்தேசி
அடுத்த திருக்கண்ணுக்குப் போல நினைக்கவே அதிர்வேட்டு போட்டிடவே
எடுத்ததாம் சவாரி தென்னந் தோப்பருகே இடையர் மண்டபத்தை.......
 More