Wednesday, May 9, 2012

அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழகுறச் சொல்லி மதுரை நோக்கி வரும் பாங்கு வர்ணிப்பு பாடலில்....

...கரியமால் அப்பனே !
விண்டார்கள் தொண்டரெல்லாம் அழகர் புரிக்கண்ணன் விமலன் அவர்கள் தன்னை
வணங்கிடுவீர் நீங்களெல்லாம் கேந்திரபாலர் ...
முதல் வடக்குக் குடவரையில்
கலக்கமில்லாப் படிவாசல் நெய்வேத்திய பூசை கற்பூர தூபதீபம்
துலக்கமதாய்க் கொடுத்து மூன்று காலைவேளை தொகுதிப்படி முறையாய்
..................... பட்டர் முதல் ஆண்டாரும் நாட்டார்க்குரைக்கப் பணிந்து நமஸ்கரித்து
கட்டணம் தவறாமல் நடக்கிறோமெந்த நாளும் கருவலமே என்றுரைத்து
எல்லோரும் கோவிந்தா என்று பொய்கைகரைபட்டி ஏகினார் பட்டர் முதல்
சென்று திரும்பிவரப்பரமசமிப் பட்டரிடம் செப்புவார் செந்திருமால்
வாமனரே வைகைவலம் நாளைப் பயணம் வைக்கலாம் தென் கூடலுக்கு
நேம விதிப் படியே நான்கு கோட்டை வாசலுக்குள் நேமியும் பன்முறை போய்
உள்கோட்டை வாசலிலே ஆழ்வார் கருடாழ்வார் உடையாழ்வார் காவலுடன்
செல்வதற்குள் மடப்பள்ளி திருப்பரிச்சி முதலாக திருமால் அவர் காவல் என்றார்
கருமண்டபமும் களஞ்சியம் காணிக்கைக் குடவரையுள் கல்படியோன் காவலேன்றார்
திருமாலுடைய தொட்டிபட்டி அயராமணி மண்டபம் சுரங்க முதலாச் சித்தர்கள் காவலேன்றார்
மறுகுமலரணிந்த மாதவன் சொற்படியே வாமணன் கட்டளையில்
வருமலர் இணைமாற்றித் தீர்த்தமதை வழங்குகின்ற மஞ்சனையாள் பேராக்கு
பெருகும் படையோடுள்ளிச் சமர்முடித்து வந்த சித்தர் பிரான் மலையை
காத்து வருவீரெல்லாம் வற்றாமல் தீர்த்தம் கலங்காமல் ஈயெறும்பு
காவலுடன் நானிருப்பேன் ரகுபூபதியே நீங்கள் வைகை நதி போங்களென
ஆவலுடன் செங்கமலன் மஞ்சன நதி ராக்குரைக்க திருமாலும்
தாமோதரக் கண்ணன் தானமலர்த் தண்டியலைத்தான் தூக்கி வாருங்கள் என்றார்
போய்வரேன் என்று சொல்லி சேவகரும் மாறனைமைக்காரரும்
பல்லக்கைத் தூக்கி பட்டர் வலம்புரிச் சங்கூதிடவே
நாட்டார்கள் கொம்பூத செகண்டி நாதம் நாலு திக்கும் நாள் முழங்க
கோர்த்தார்கள் கூடிவர காட்டுப் பிள்ளையாரிடத்தில் கூறிய சேதிகளை
நடந்தார் பெருமாளும் போய்கைக்கரைபட்டி கலவை நதியும் நல்லதென்று கடந்து.................
 

No comments:

Post a Comment