Sunday, July 29, 2012

அனுபவ முத்திரைகள்: பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.(அழகர் கோயில் கா...

அனுபவ முத்திரைகள்:
பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.

(அழகர் கோயில் கா...
: பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு. (அழகர் கோயில் காவல் தெய்வம் ! வர்ணிப்பு பாடலில் .) சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க ...

பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.

(அழகர் கோயில் காவல் தெய்வம் ! வர்ணிப்பு பாடலில் .)

சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க
சந்தனக் கருப்ப னொன்னு சங்கிலி கருப்பன் இரண்டு
காளாங்கிக் கருப்பன் மூணு
உச்சிக் கருப்பன் நாலு ஊமைக் கருப்பன் அஞ்சு
உருளு தேரடிக் கருப்பன் ஆறு
ஆறு கருப்பனுக்கு ஏழாவதாக பெரிய கருப்பன் எசமானாகஏழு கருப்பனும் பிறக்க



அந்திமாடன் சந்திமாடன் ஆகாயமாடன் சுடலைமாடன்
லாடனென்ற சந்நியாசி ஆக மாடன் வகையி லைந்தும்
மாடன் வகையி லைந்தும் அஞ்சும் ஏழும் பன்னிரண்டு
சங்கன் சமயன் பனிரெண்டும் இரண்டும் பதினாலு
சப்பாணி சோனை சமர்த்தர்கள் காவல் ஆகப்
பதினாலு ரெண்டும் பதினாறு
வீரபத்திர னென்னும் அக்னி வீரன் அடங்காத இருளன்
வீரன் வகையில் இவர்கள் இணைப்பு பதினெட்டு
அந்தப் பராசக்தியின் துர்க்கை என்ற ஒன்பது பிறவியிலே
மூணு பிறவி
ஏ அம்மா! ஆத்தாள் பரமேஸ்வரி படிவாசல் சக்தி
வல்லிப ராபரி- அவள்
பேச்சி யென்றும் இருளாயி யென்றும் ராக்காயி எனவும்
ஆக இவர் பிறவி மூணு வகை
பதினெட்டு மூணுங் கணக்கு பந்தி இருபத்தி யொன்னு
அஞ்சிரண்டு ஏழு இவர்களுடன் பந்தி அடங்க இருபத்தி யொன்னு
இருபத்தோர் பந்தி அருபதோர் சேனைதளம்
அடக்கி அரசால அய்யன் குருநாதன்
கம்பிகளைத் தானே வாகுடனே கட்டிக் கரைகாத்துவரப்
பிறந்த மக்களெல்லாம் கூட்டி மலையாள நாடு மந்திர
மகாராசன் கோட்டை வந்து தங்கி இருக்கையிலே
பிறந்தாய் மலையாளக் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தால் கீழ்நாடு
சிறந்தாய் மலையாளம் கருப்பனுட சேனைத்தளம் சிறப்படஞ்ச கீழ்நாடு
பிறந்தாய் மலையாளம் கருப்பன் துலங்குவது கீழ்நாடு....
 .........அழகர் வர்ணிப்புப் பாடல்

இந்த ஆடி மாதத்தில் அழகர் கோயிலில் கள்ளழகர் தன் கருவறைக்குச் செல்கிறார். இது சமயம் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்புக்கு சந்தனக் காப்பு வைபவம் நடந்தரங்கேறும்.
 

Saturday, July 28, 2012

With nice memories of last year.


With nice memories of last year.
 
Starring Aravindh Yadav.
A video slideshow by Kothai Dhanabalan, featuring 34 photos from Madurai, Rameswaram, Kanchipuram.

Friday, July 27, 2012

அனுபவ முத்திரைகள்: தமிழனுக்கு மதம் யாது! அது ஏது !மதங்கள் எங்கும்...

அனுபவ முத்திரைகள்:
தமிழனுக்கு மதம் யாது! அது ஏது !


மதங்கள் எங்கும்...
: தமிழனுக்கு மதம் யாது! அது ஏது ! மதங்கள் எங்கும் பரவிக் கிடக்கும் இவ்வுலகத்தில் ,சற்று பின்னோக்கி பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்...

Wednesday, July 11, 2012

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.: தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந் தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்டதண்ட வெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு ம...

கந்தரலங்காரம்.


தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்டதண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட காவலனே



.........கந்தரலங்காரம்.



வேகம் நிறைந்தவன் , தண்டாயுதத்தை ஏந்தியவன்.முன்னொரு காலத்தில் மண்ணுலகையும்,விண்ணுலகையும் கவர்ந்தவனுமான .
சூரபத்மன் தங்களை நெருங்குவதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓட ,அப்போது தான் வேலாயுதத்தை விட்டெறிந்து,தேவர்கள் தங்கள் உலகை விட்டுச் செல்லாதபடிக் காத்த முருகப் பெருமானே!
தங்கள் ஞானக் கண்ணால் பார்த்து ,தமது ஞான நெறியால் உன்னை நெருங்கி ,உனது மெய்ஞ்ஞானம் எனும் தேனை முகர்ந்து பருகுவார்கள் அடியார்கள். அந்த மெயஞ்ஞானத் தேனை உடையதும்,தண்டை அணிந்ததுமான உன் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.


Saturday, July 7, 2012

அனுபவ முத்திரைகள்: தினசரி தியானம்

அனுபவ முத்திரைகள்: தினசரி தியானம்: தினசரி தியானம் இறைவா உன்னையே நினைந்திருந்து ,உன்னை நான் அடைவேனாக! படைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம் புதுப்புது வடிவங்களை ...

தினசரி தியானம்


தினசரி தியானம்


இறைவா உன்னையே நினைந்திருந்து ,உன்னை நான் அடைவேனாக!

படைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம் புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத் தானே புதிய உருவமாய் மாற்றிக கொள்கிறது. மனிதன் தன்னை மேல
ோனாக உருவாக்கிக் கொள்ள இயலும். அவன் ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படி அமைக்கிறது .


உன்னைநினைந் துன்நிறைவின்
உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்
அடைக்காதே பராபரமே !



.........தாயுமானவர்.