Thursday, February 9, 2012

குலசேகர ஆழ்வார்

 
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் 
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே


அளப்பரிய செல்வங்கள் பெற்று , சேவகர்களும்,தேவகண்ணியர் பலரும் சுற்றி நின்று சேவிக்க விண்ணை ஆளும் யோகமானாலும் சரி, செல்வாக்கோடு பூமியாளும் யோகமானாளும் சரி அதை என் மனது வேண்டாது.மாறாக, தேன்
சொரிந்து நிற்கும் பூக்கள் பலவும் மலரும் சோலையுள்ள திருவேங்கட மலை மீதிருக்கும் சிறிய அளவினதாயினும் நீரூற்றுடைய சுனை எனும் நீர் நிலையில் சிறு மீனாய் பிறக்கும் பிறவியையே வேண்டி நிற்கிறேன்.





குலசேகர ஆழ்வார் தன் பக்தியில் எல்லோரையும் மிஞ்சி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது இந்த பாசுரம். திருமால் உறையும் திருமலையில் பொய்கையில் மீனாய் பிறந்து அவன் திருவடி ஒன்றையே தான் போற்றும் பேராய் கருதி நிற்கிறார்.




கோதைதனபாலன்



 

No comments:

Post a Comment