Monday, February 27, 2012

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல்


ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று  நாமம் படையாதே - மேவியசீர் 
வித்தாரமுங்  கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.


......பட்டினத்தார்


இந்த உடலிலிருந்து ஒருநாள் ஆவி பிரிவது தெரிந்தும்
உடலை சீராட்டி,பாராட்டி உறக்கம் கொண்டு புதுப்புது வாழ்வு
  காண யத்தனிப்பது போல் நம் உள்ளத்தூய்மையும்,   பாவிஎன்று    ஒருவரும் இகழாத வண்ணம் கொள்ளவேண்டும்.  எனவே பேதலிக்கும் என் நெஞ்சமே ! பாவங்களை கழுவிட ஒவ்வொரு பிறவி என்று போகும் முன்னம் ,இப்பொழுதே  
 ஒரு மாயந்தவன் போன்று   நீ இருந்து 
பாவியாக இராது   உள்ளத்தூய்மை கொண்டு ஞானவழி நில் ! அதுவே பரமனை அடையும் வழி.


கோதைதனபாலன் 

No comments:

Post a Comment