Saturday, February 11, 2012

அருட்பெரும் ஜோதி அகவல்

 விண்ணுறு  விண்ணாய் விண்ணடு விண்ணாய் 
அண்ணி நிறைந்த மருட்பெரும் ஜோதி..
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெரும் ஜோதி..
அனலினு ளனலா யனனடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெரும் ஜோதி..  
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெரும் ஜோதி..
புவியுனுட் புவியாய்ப் புவினடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெரும் ஜோதி..  


 
 

....அருட்பெரும் ஜோதி அகவல்





அண்டசராசர வெளியில் பரந்து கிடக்கும் வானினும் விரிந்த விண்வெளியாய்
அதனிலுள் பரிபூரணமாய் கிடந்து அருள் புரியும் ஜோதிசிவமே!      எங்கும் சுற்றிவரும் காற்றினுள்ளும் காற்றாக நுழைந்து அதன் வலிமையோடு ஒரு வலிமையாய் நின்று  அருள் புரியும் ஜோதிசிவமே!    நெருப்போடு நெருப்பாக உள்தகித்து நின்று தீதானவற்றை பொசுக்கும் இயக்கமாய் இயங்கி அருள் புரியும் ஜோதிசிவமே!   நீர்பரப்பினுள் நீராக நீருக்குள்ளும் நீரூற்றாக பெருகி அணைபோல ஆகி வழி நடத்தி அருள் புரியும் ஜோதிசிவமே!  இந்த மண்ணெங்கும் நீக்கமற நிறைந்து ஒருஅவையின் பெரு உருவாய் விளங்கி 
அருள் புரியும் ஜோதிசிவமே!   


இவ்வாறாக பஞ்சபூதங்களின் இலக்கணங்களாக ஜோதி சிவத்தைபோற்றி துதிக்கிறார் இராமலிங்க வள்ளலார்.










கோதைதனபாலன்.





No comments:

Post a Comment