Friday, February 3, 2012

பெரியாழ்வார்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
         நிறமெழ  உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
        மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
       என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா
     என்னுயிர்    காவலனே. 
    ...பெரியாழ்வார் பாசுரம்                                                     .



உரை  கல்  ஒன்றின் மீது தங்கத்தை உரசி அதன் சுடர் விடும் நிறம் பார்த்து அதன் மதிப்பை போற்றுவர். இது போலவே கார்மேக வண்ணனே ! உன் நாமங்களை என் நாவில்  எஞ்ஞான்றும் சொல்லி சொல்லி நனி உயர்வாக்கி, உள்ளத்தே செலுத்தி எனது சித்தத்தை உனக்கே சீராக்கினேன். என் உயிர் காப்பவனே ! உன்னுள் என் சித்தம் கிடப்பது உண்மை போல் நீயும் என்னுள் கிடப்பதும் உண்மையே ,


கோதைதனபாலன்.









No comments:

Post a Comment