Tuesday, February 7, 2012

பெரியாழ்வார்

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து 
    கட்டி நன்குஉடுத்த பீதக ஆடை 
அருங்கல உருவின் ஆயர் பெருமான் 
    அவன் ஒருவன் குழல்ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும் 
   மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும் 
இரங்கும் கூம்பும் திருமால்நின்ற நின்ற
    பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே. 
       
.....பெரியாழ்வார் 


மரங்கள் செழிக்க நீரோடுகின்ற பகுதியில் விளையும் நாணல் ஒத்த செடிகளின் மீது தடம் வைத்து நடக்கும் பொது அமுங்கி செத்தை என்ற பேர் பெறுகிறது.அதுவே வளர்ந்து ,மலர்களெல்லாம் உதிர்த்து நிற்கமுடியாது தாழ்ந்து , கருமையழகு கண்களுடன் தோகை விரித்தாடும் மயில் ஒத்த நிறத்தவனான இடையர் குலப்பெருமான்,பல அழகு அணிகலன்கள் பூண்டவனாய் கையில்பிடித்திருக்கும்  கானம் இசைக்கும் குழலாக மாறும்போது அதன் பெருமையை என்னென்று சொல்வேன்? அது வளரும் இந்த உடல் மற்றையது போன்று செத்தையாக வேண்டாம்;  மாறாக திருமாலே, உன் கையில் வைத்திருக்கும் குழல் போன்றே என் உயிர் பக்தியாய் அதில் வளர்ந்து மாறி நிற்க வேண்டும்.


அவர் தன பக்தியை சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.

கோதைதனபாலன்.  














No comments:

Post a Comment