Wednesday, April 25, 2012

திருவாசகம்.

கேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான்
கிளையில்லான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
தாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தெனவெல்லாங் காட்டிப் பின்னும்
 கேளா தெனவெல்லாங் கேட்பித் தென்னை
 
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே
.................திருவாசகம்.

No comments:

Post a Comment