Friday, April 13, 2012

......கந்தரலங்காரம்

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன நேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் துள்ளாடி வாடிப் பதைக்கின்றதே .
......கந்தரலங்காரம்


... தோகைகளுடன் கூடிய மேன்மை மிகுந்த மயிலை
வாகனமாகப் பெற்றவரே ! உதவி ஒரு சிறிதும் இல்லாமல்
தாவிப் படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல ,பாவியாகிய எனது துணையற்ற மனமானது
தளர்ந்து,வாட்டமடைந்து பதிக்கின்றது.எனவே தேவரீர்! உமது
உமது சிறந்த தாமரை போன்ற திருவடிகளுடன் சேர்த்து அடியேனைக் காத்தருள்வீராக.

No comments:

Post a Comment