Sunday, April 8, 2012


உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே



... .........கந்தரலங்காரம்.


பாற்கடலில் மந்திர மலையை மத்தாக நட்டு ,பாம்பரசு புரியும் வாசுகியை
கயிறாக வளைத்து பார்கடலானது பம்பரம் போல் சுழலுமாறு கடைந்த நாராயண மூர்த்தியின்
மருகனே ! பிறந்த இடங்களில் உழல்வதையும்,இறப்பதையும் நீக்கி அடியேனை ,தேவரீர் நும்மோடு
யான் இரண்டறக் கலந்து உன்னால் ஆட்கொள்ளும் நிலைமை எந்நாளோ , அருள் புரிவீர்...

No comments:

Post a Comment