Friday, January 3, 2014


யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல.. .. //



‘குமார் ..!’
‘இதோ வந்துட்டேன் ஐயா ..!’
‘இந்தா இந்த ஃபைல எல்லாம் எடுத்து கட்டு.. வண்டில எடுத்து வை. ‘ டிரைவர் கோவிந்தனை ரெடியா ஜீப்ல ஆபீசெர்ஸ் எல்லாத்தையும் அழைத்து வர சொல்லு. சரிய
ா பத்துமணிக்கு கேம்ப் கிளம்பியாகணும்.’
இது முத்துசாமி கமிஷனர். ஒரு உயர் நிலை அதிகாரி.
தங்கள் படிப்புக்கு பெருமை சேர்க்க அன்று அரசு வேலைக்கு சேர்ந்து பணியாற்றும் தன்மைத்தவரில் இவரும் ஒருவர்.

'சரி லீலா ! நான் ஆபீஸ் கிளம்பறேன். அவள் கொண்டு வந்த காபி குடித்து விட்டு , பூட்ஸ் மாட்ட ,
லீலா... ‘ கேம்ப் போனால் நேரம் ஆகிடுமா..இரவு நேரம் சென்றிடுமா.. பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வண்டி.. .... ‘ ஏற்பாடு பண்றேன்.. தெரிந்த ஆட்டோவை டயத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.

கேம்பில்..கெடுபிடி. வேண்டியவை சிக்கியது... அரசுக்கு இவர்போன்ற அதிகாரிகளால் வரி வருமானம் பாக்கி இல்லாமல் வசூலாகிறது. மாநில வருமானம் ..மற்ற துறை ஊழியருக்கும் சம்பளம் போட பயன்படுத்தப் படும். இவையெல்லாம் அரசு கணக்குகள்.இவற்றை எல்லாம் லீலா உணர்ந்தே இருந்தாள். அவளிடம் முத்துசாமி ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசுவதுண்டு. அவளும் படித்தவளாதலால் புரிந்து கொள்ளுவாள். மத்திய அரசு அதிகாரி, மாநில அரசு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் செயல்பாடுகளை எப்படி புரிதலுடன் நடத்துகின்றனர் என்றெல்லாம் அவளிடம் சொல்லி விளக்குவார். சிலநேரம் இவளும் அவரிடம் வாதம் பண்ணுவாள். ‘ இந்த அரசு இத்தனை கோடி ரூபாய்க்கு டார்ஜெட் வைத்துள்ளது ..’ முத்துசாமி.. ;
இப்படியே டார்ஜெட்...ஐ உயர்த்திப் போனால் அவனவன் செய்யும் தொழிலை விட்டு விடமாட்டானா.. அப்படி நின்று விட்டால்.. வேலை யார் கொடுப்பார்கள்..’ லீலா கூறுவாள். ‘கறுப்பு பணம் சேரக் கூடாது..அதுதான் கணக்கு..’ ..இது முத்துசாமி ‘
‘அதற்குத்தான்..கோயில், பள்ளி, அநாதை விடுதி, மருத்துவமனை போன்றவற்றை அவர்கள் நிர்வகித்து வந்தால் வரி விலக்கு கொடுக்கிறீர்கள்... அதற்கு மேலுமா கறுப்பு பணம் சேரும்..’ .. லீலா
‘நீ எதெடுத்தாலும் வித்தியாசமா யோசிக்கிற.. எல்லாருமே என்னைப் போல் இருக்க மாட்டார்கள்.’
இப்படி அவர்கள் பேச்சு சமூகத்தைச் சார்ந்ததாய் இருக்கும்.

முத்துசாமி கூறியது லீலாவுக்கு உணர்த்த அந்த நாளும் வந்தது. ஒரு நாள் மாலையில் முன்னிருட்டு நேரம் பலத்த சிந்தனையோடு வந்த கணவரை.. அவள் ஒன்றும் கேட்கவில்லை. பிள்ளைகளிடமும் அவர் சரியாக முகம் காட்டி சிரிக்க வில்லை என்பதை உணர்ந்தாள். சரி தானாக சொல்லட்டும் என்று வாளாவிருந்தாள். மறுநாள் அவர் ஆபீஸ் செல்லாமல் வீட்டிலிருந்தே ஃபைலில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். மதியம்போல் லீலாவிடம் தன் மனத்தாங்கலை வெளியிடலானார்.

‘லீலா! எவ்வளவு ஆசையாக இந்த வேலையில் சேர்ந்தேன். இந்த அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள். ஜனங்களை முட்டாளாக்கி சோம்பேறி களாக்குகிறார்கள். இன்றைக்கு இந்த புதியஅரசில் இந்தத்துறை மந்திரி பணம் சி.எம் கேட்கிறார் என்று எல்லை மீறி வசூல் பண்ணச் சொல்கிறார். இந்தத்துறைக்கு மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இதே நிலைமை. நான் உள்பட ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்று தொகை நிர்ணயம் பண்ணியுள்ளனர். எனது பெரிய அதிகாரி கூப்பிட்டு சொல்லி விட்டார். எல்லாம் வரும் தேர்தலில் நல்லபேர் எடுக்கனும்னு ஒரே குறிக்கோள்ள எல்லாரும் நிற்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் யாவுமே இதனால் கிடப்பில் தூங்குகின்றன. என் மனது தாங்கல.... கஷ்டமா இருக்கு.
லீலாவிற்கு அவள் கணவன் பற்றி தெரியும்... அந்த நேர்மையை அவளும் விரும்புவாள். ஒருமுறை முத்துசாமி பெயரை சொல்லி கீழ்நிலை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியுள்ளார். சில மாதம் கழித்து கொடுத்தவர் இவரிடம் வந்து இதுபோல் நடந்தது... தங்களுக்கு பணம் சேர்ந்ததா என கேட்க.. இவர் வெகுண்டு..’ ஏய்யா! உங்களுக்கு சம்பாதிக்கதான் தெரியுதே ஒழிய ஆளை பணவிஷயத்தில் சரியாக எடைபோடறதில்ல...எல்லாருமே ஓரே மாதிரி லஞ்சம் வாங்கறவங்கனு நினைக்காதே, வந்தவர்,

‘சார் ! அப்படின்னா அந்த அதிகாரிக்கிட்ட நான் தந்த 50,000 ரூபாய் கொஞ்சம் வாங்கித் தந்திடுங்களேன். உடனே இவர் காரமாக உங்க எச்சிபுத்தி உங்களை விட்டுப் போகாது...போ.போ..யார்கிட்ட கொடுத்தியோ அவன்கிட்டே நீயே போய் கேளு... நீ க ட்டவேண்டியதை கட்டிடு..வேறு வழி இல்லை ‘ என்று சொல்லி அனுப்பியது அவள் மனதில் கணநேரம் தோன்றி மறைந்தது.
‘ சரி, இப்ப இதற்கு என்ன செய்றதா உத்தேசம்...பேசாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்களேன்..’
‘ அது சரிப்படாது , தேர்தல் வர்றவரைக்கும் இது செல்லும்... சாயந்தரம்..கீழ் உள்ள ஆபீசர்ஸ் ..ஐ வர சொல்லியிருக்கேன் ... டீ ரெடி பண்ணு. அவர்களும் வந்தனர்...சம்பாஷனை லீலா காதிலும் விழுந்தது.

‘ இங்க பாருங்க சார்..மந்திரியோ ,சி.எம். ஒ தங்கள் நிலை மாறுவதை இல்லை. அடுத்த அரசு வந்தாலும் இனி இதே நிலைப்பாடுதான். நான் நேரடியாக வசூல்ல இறங்கலை. உங்களுக்கு பதவி உயர்வு, பிடித்த இடத்திற்கு வேலை மாற்றம் உடனடி வேண்டுபவர் இக்காரியம் செய்து நேரிடையாக மேலதிகாரையோ ,மந்திரியையோ கண்டுகொள்ளுங்கள்..தேடிக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. எதிலும் என் பெயர் கூடாது..’

இவ்வாறு சொல்லி அனுப்பி வைத்தார்.
லீலா, மனதில் பரவாயில்லை... இவரும் எப்படி தீர்க்கமாய் சொல்லிவிட்டார்.. இதில் ஜெய்ப்பது என்ற நிலைப்பாடு இல்லை. தான் கொண்ட கொள்கையில் தவறாத நிலைக்கு தன மனதில் செய்துகொண்ட ...அறம் சார்ந்து ஒரு உடன்படிக்கை... ! அவர் கையில் கரைபடவில்லை. அவள் மனம் பூரித்தது.


கோதை தனபாலன்.

No comments:

Post a Comment