Friday, January 3, 2014



ஆன்மீகத்தில் எனக்கு மனதில் பதிந்த ஒன்று .. நம்மாழ்வார் கூற்று.


செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் ,எத்தைதின்று எங்கே கிடக்கும்..? இது மதுரகவி ஆழ்வார் கேட்டகேள்வி. இதற்கு பதில் சொல்லுமுகமாகவே பாலகப் பருவத்தில் நம்மாழ்வார் முதல் முறையாக இப்படி திருவாய் மலர்ந்தருளினார்.. " அத்தைத் தின்று அங்கே கிடக்கும். நமக்கு மேலார்ந்த பொருளில் ஒன்றும் விளங்காது. ஆனால் சுற்றியிருந்த பக்த சிகாமணிகளுகேல்லாம் அந்த தத்துவம் விளங்கிற்றே.

கேள்வியின் பொருள்... இந்தஉடல் இப்பிறவியில் நீங்கி புது பிறவியாக புது உடல் பெற்றால் எதைக் கொண்டு ,எதன் அடிப்படையில் தன் உயிரை வளர்க்கும்.?
பதிலின் விளக்கம்...
அது எந்த ரூபமாகப் பிறவி எடுத்துள்ளதோ அந்த உயிரினம் அல்லது உயிர்ப்பொருள் ஒழுங்குகளிலிருந்து தன வாழ்க்கையைத் தொடங்கும்.

இதைப் புரிந்து கொண்ட பொழுது ... ஔவை சொன்னதே நினைவில் ஓடியது.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது..மானிடராயினும் ..கூன் ,குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது.

தமிழ் ஆன்மீக பக்தி இலக்கியங்கள் பல நம்மிடை இருக்கையில் படித்து பயன் பெறாமல் காலத்தைக் கழிப்பது வீணே .



கோதை தனபாலன்.









































 



No comments:

Post a Comment