Friday, January 10, 2014

கம்பராமாயணம்..    ( ஒரு ஒப்பீடு .. படித்தது.)

'' It was hard for Hitchkock's colleagues to understand how a man doing such a stressful work could stay so calm and detached.'

....Robert Green ..p.31.

 ஹிட்ச் காக்கின் வெற்றியின் ரகசியமே அவர் மனநிலையை எந்த ஒரு அழுத்தத்திற்கும் இடம் கொடாது சமநிலையில் வைத்து காரியம் சாதித்ததுதான் அவரை வெற்றி வீரராக்கியது.
இங்கு இதே கருது கம்பராமாயணத்தில் ராமனைப் பற்றி வர்ணிக்கும் இடத்தில எடுதியம்பப்படுகிறது.  முதல் நாள் அரசுரிமை சொல்லி தசரதர் கொசலனாட்டின் மணிமகுடத்தை அவனுக்குச் சூட்ட விழைந்தபோதும் சரி, மறுநாள் கைகேயி பெற்ற  வரத்தின் பயனால் பரதனுக்கு  மகுடம்  மாறும் நிலையிலும் சரி...ராமனின் பேராசை, சந்தோசம்,வருத்தம் எதுவும் காணாத சமநிலை   தோற்றத்திலேயே இருந்தது...  உணர்த்தும்பாடல்..

''தாதை  அப்பரிசு உரை செய , தாமரைக் கண்ணன் 
காதல் உற்றிலன்; இகழ்ந்திலன் ;கடன் இது என்று உணர்ந்தும் 
யாது கொற்றவன் ஏவியது, அது செயல் அன்றே 
நீதி எற்கு என நினைந்து , அப்பணி தலை நின்றான்.'
....மந்திரப்படலம் ..69.       
   
 ' என் இனி உறுதி அப்பால் . இப்பணி தலைமேற் கொண்டேன் 
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் ..'
.......கைகேசி சூழ்வினைப்படலம். 114   

இந்த இரண்டு சூழ் நிலையையும் ராமனை நெருங்கி கிட்டத்தில் இருந்து பார்த்தவள் சீதை.அரசு என்றபோதும் , காடு என்றபோதும் இராமன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாது கல்போல் இருந்தது..அதே சமநிலைத் தோற்றம் 13 ஆண்டுகள் கழித்தும் மறக்கமுடியவில்லை... அதனால் தான்  பாதகர் சிறையில் தான் வாடியபோதும்...அவளின் மலரும் நினைவுகளில்  
அந்தக் காட்சி நிழலாடுகிறது.  சொல்லும் பாடல்...

'மெய்த் திரு பதம் மேவு என்ற போதிலும் 
இத் திரு துறந்து ஏகு என்ற போதிலும் 
சித்தரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் .'
....காட்சிப் படலம் 20


 கோதைதனபாலன்.

No comments:

Post a Comment