Saturday, June 30, 2012

கோயில் வழிபாடு.

கோயில் வழிபாடு.




கோவில் முழுவதும் கண்டேன் - உயர் 

கோபுரம் ஏறிக் கண்டேன் 
தேவாதி தேவனையான் - தோழி 
தேடியும் கண்டிலேனே.
சிற்பச் சிலை கண்டேன் - நல்ல 
சித்திர வேளை கண்டேன் 
அற்புத மூர்த்தியினைத் - தோழி 
அங்கு எங்கும் கண்டிலேனே.
தூபம் இடுதல் கண்டேன் - தீபம் 
சுற்றி எடுத்தல் கண்டேன் 
ஆபத்தில் காப்பவனைத் - தோழி
அங்கேயான் கண்டிலேனே.
கண்ணுக்கு இனிய கண்டு - மனத்தைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே - தோழி
பயன் ஒன்று இல்லை அடி
உள்ளத்தின் உள்ளான் அடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோவில்
உள்ளேயும் காண்பாய் அடி .




.......கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

No comments:

Post a Comment