Tuesday, June 26, 2012

திருமந்திரம்.


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலைச் சொரியுமே 




எல்லோரும் வெளியே பார்வையைச் செலுத்துகிறார்கள்.தங்கள் உள்ளே பார்வையைச் செலுத்தி மனதை ஆராய்பவர்கள் சிலரே. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்..!உள்ளே ஐந்து பசுக்கள் ஐந்து புலன்களாய் விருப்பம் போல் மேய்வதை.மேய்ப்பார் இல்லாமல் வெரி பிடித்து திரியும் மாடுகள் அவை. மேய்ப்பார் இருப்பின் .அவற்றின் வெறி அடங்குமாறுச் செய்தால் அவை கட்டுக்கடங்கி ஞானப் பாலைச் சொரிவன. இதனால் பொல்லாதவையும் நல்லவையாய் மாறக் காணலாம்.





....திருமந்திரம்.

No comments:

Post a Comment