Sunday, June 17, 2012

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது.

'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால்ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே ...

திருநாவுக்கரசரை சமணம் தழுவிய மன்னன் , பலவகையிலும் ,குறிப்பாய் கல்லைக் கட்டி கடல் நீர் நடுவே மிதக்கவிட்டு ,சைவத்தை தூற்றிய காலை இவர் பாடும் பாடலிது.    'எகத்தாளமிடுவோரும்   ஆட்டம் போடுவார்; அவரை நீ அடக்கப் புகுந்தாலும் அடங்கி விடுவர்;பாடாதவரும் பாடுவார்; உன்னை விட்டு விரட்டி ஓட வைத்தாலும்  ஓடுவர்; உள்ளம் உருகியே உன்னை நினைந்து  இருக்கவும் வைத்தாலும் இருப்பார். ; 
 பாட வும்  செய்வர்; பணிந்து செய்யும் வேலைகளையும் செய்வர,   உன் நெற்றிக் கண்ணைத் திறக்காத போதும் நீ காட்டும் நெறிதனை கண்டு செல்பவர்.  இப்படியிருக்க நான் உன்னையே நினைந்திருக்க,உன் அருளாலே  என்னைச் சுற்றியுள்ள சுடுநீரும் தண்ணீராம்; கல்லும் நான் ஈடேறும்  தெப்பமாம். 



இதையே கவியரசு தன் திரைப் பாட ல் ஒன்றில் கண்ணனை நினைத்து பாடும் பாடலுக்கு  கையாண்டுள்ளார்என்பது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment