Wednesday, June 13, 2012

.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி


குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை
சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இலங்குமரர் கோமான் இடம் .


.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி 


திருவேங்கடமலை தவிர வேறொரு இடமும் அறியாத குறத்தியர் ,
அழகிய வளையல்கள் கைகளில் ஊஞ்சலாட மூங்கில் மரங்களை வளைப்பார்.
அந்த மூங்கில்களோ சந்திர மண்டலமளவு ஊடுருவி ,ராகுவைத் தவிர்த்து
சந்திரனை விடுவிக்கும்.அத்தகு திருவேங்கட மலையே மேலுலகிலுள்ள
சிரஞ்சீவிகளான புருஷோத்தமன் குடியிருக்கும் ஸ்தலமாகும்.

No comments:

Post a Comment