Wednesday, June 20, 2012

பரிபாடல்..செவ்வேள்


நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன்
இருநிலத் தோரும் இயை கென ஈத்தநின்
தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத்து அவளோடு
மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை ..

பரிபாடல்..செவ்வேள்
கடவுள் வாழ்த்து ..நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

'முருகவேளே! தேவலோகத்தில் நீ எழுந்தருளியிருப்பது
போலவே இவ்வுலகத்தும் எழுந்தருளியிருக்கும் விருப்பத்தைக்
கொண்டு அறிவு எல்லையால் அறியப்படாத கடம்பினை மேவித்
தேவர்கள் அடையும் இன்பத்தை மக்களும் அடைக , என்று திருவருள்
புரியும் திருப்பரங்குன்றத்தின் கண்ணே நீ வள்ளி நாச்சியாரை மனம் புரிந்து
அருளியது வானுலகத்தில் தேவ யானையை மணந்ததர்க்கு மாறாக
இவ்வுலகத்தில் புரிந்த செயல் போலும்.

No comments:

Post a Comment