Sunday, March 18, 2012

பரிபாடல்

ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்
பூண் அணி சுவைஇய வாரணி நித்திய
நித்தில மதாணி அத்தகு மதிமறுச்
செய்யோன் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
வைவான் மருப்பிற் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று
ஒடியா உள்ளொமொடு உருத்தொருங்கு உடன் இயைந்து
இடியெதிர் சுழறும் காலுறழ்பு எழுந்தவர்
...
கொடியறுபு இறுபு செவிசெவிடு படுபு
முடிகள் அதிரப் படிநிலை தளர
நனி முரல் வளை முடியழி பிழபு....



....பரிபாடல்.....கீரந்தையார் பாட்டு
 நன்னாகனார் இசை
பண்ணுப்பாலை யாழ்


 நின் திருமார்பில் உள்ள ஆபரணங்கள் இந்திர வில்லை ஒத்தது .அவற்றின் இடையே உள்ள
நித்தில மதாணியோ சந்திரனை ஒத்தது. அந்தச் சந்திரனுக்குரிய மருவைப்போல திருமகள்
வீற்றிருக்கின்றாள். நீ ஆதி வராகமான காலத்தில் வெள்ளத்துள் மூழ்கியெடுத்த திருமகளை
கொம்பிடைக் கொண்டு தழுவதனாலே புள்ளி அளவேனும் அந்த நிலம் வெள்ளத்தால்
வருந்தவில்லை என்ற புகழோடு அத்திரு மார்பு விளங்குகிறது. எதிர்த்து வந்த அவுணர்கள்
கலங்க இடியோசை போல நின் சங்கு முழங்குகிறது
.
 

· ·

No comments:

Post a Comment