Sunday, March 18, 2012

திவ்வியபிரபந்தம்


      ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து

பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்மேல் பிள்ளையும் பெய்துபெய்து
தருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடை நடவானோ !


 
 
கோதைதனபாலன்.
 
....பெரியாழ்வார் 

 உள்ளங்கால் ஒன்றில் சங்கு ரேகையும், இன்னொன்றில் சக்கர ரேகையும்
 கொண்டு  அவை முத்திரைகளாக கால் பதித்த இடங்களில் பதிய, கடலொத்த  கண்ணனே !  நீ நடக்கும் அழகு கண்டு மனம் இன்புற்று,  மேலும்மேலும் இன்புறும் வண்ணம்
 மன்மதன் மகன் போன்ற வடிவெல்லாம் அழகுறப் பெற்று நீ தளர் நடை போடுவாயோ ! 

No comments:

Post a Comment