Monday, January 23, 2012

தாயுமானவர் பாடல்


கைவிளக்கின் பின்னே போய்க்
காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய்
மெய் காண்ப தெந்நாளோ .. !

இது தாயுமானவர்
சிவனை நினைத்து பாடிய வரிகள்.


கைவிளக்கு கொண்டு இருள் நீக்கி அடியெடுத்து பாதை ஒன்று காண முயலுவது போல் மனசாட்சி என்னும் உண்மை விளக்கோடு, இருள் போன்ற பல சுக துக்கங்கள் நிறைந்த வாழ்வில், எல்லாவற்றிர்க்கும் உண்மை பொருளானவனே உன்னை தேடி வருகிறேன்.. நீ விரைந்து என்னை ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ..!





இன்று தை அமாவாசை.. சிவனை நினைந்து அடியார் பாடல் ஒன்றெடுத்தெழுதி மன நிறைவு பெறுகிறேன்.
கோதை தனபாலன்.

No comments:

Post a Comment