Sunday, September 16, 2018

THERE IS NO SUFFERING ,THERE IS NO DEATH. SATSANG & ROBERT

THERE IS NO SUFFERING ,THERE IS NO DEATH.
SATSANG & ROBERT
நன்றி ..RAMAKRISHNAN CR.
உண்மையில் ஒரு தேடலில் இருக்கும் மனம் , உண்மையை நாடி விழைந்தே இருக்க இது போன்ற பதிவுகள் .. படிக்க படிக்க ஒரு விசாலமான தெளிவை நோக்கி நம்மை நகர வைக்கிறது.
இது ஸ்ரீ . ரமணர் சீடர் ராபர்ட் அவர்களால் சொல்லப்பட்டது. இதை தன் இதயம் செய்யும் ஒரு ரீங்காரச் சிந்தனையாய்.. தனக்குள்ளேயே தானே குருவாகவும் சீடராயும் நின்று கேள்வி பதிலைத் தருகிறார்.
யாராவது இறைவனிடம் தனது துன்பங்களைப் போக்க வழி வேண்டி பிரார்த்தித்தால் என்ன நடக்கும் ? வினவுகிறார் .
துன்பத்தைப் போக்கத் தெரிந்தவனுக்குத் திரும்பவும் அதைத் தரத் தெரியும் என்பதை மனம் உணர வேண்டாமா ?
எதனால் இப்படி தோன்றுகிறது ?
நாம் நமக்குள் இருக்கும் நான் எனும் நினைவை, அது எப்படியுள்ளது என்பதை உணராமலே நாம் நம்புகிறோம்.
அது நமக்கு பெருமை யுணர்வை, உடலை , புத்தியை, உலகத்தை , இந்த பிரபஞ்சத்தை , இன்னும் கடவுளை அறிமுகப்படுத்தி விடுகிறது.
அதன் வழி நம் சிந்தை செல்ல துன்பங்களை அறிகிறோம்..உணர்கிறோம். இறப்பைப்பற்றி பேசுகிறோம். இதுவே எதுவும் முழுமையாகப் புரியாமலே நம்மை நடத்துகிறது..
துன்பம், இறப்பு என்று எதுவுமில்லை.
"நான்" .. அது இதயம் உணர்ந்தெடுக்கும் நிலைக்களனில் உள்ளதை அறிவோம்.
அதை , அதன் செயல்பாடுகளின் தன்மையை நம் அறிவு ஒருபோதும் கிரகிப்பது இல்லை.
அதனால் நேர்ந்துவிட்ட சம்பவத்திற்கு உடனே நாம் எதிர்வினையாற்றுகிறோம்.
அப்படி செய்யும்போது நாம் இந்த உடலை வைத்துக் கொண்டு நாம்தான் செய்கிறோம் , செய்யணும் என்ற நினைவிற்கு போனால் அது அறியாமையிலேயே நம்மை வைத்து விடுகிறது.
"நான் " அது இருக்கும் இடத்தில வைத்து நினைக்க நம் செயல்கள் எதுவும் இந்த உடலாலோ , புத்தியாலோ , உலகத்தாலோ அல்ல. பிரபஞ்சம் காட்டும் சக்தியினாலும் ஆட்படுவதல்ல.
அதற்கு மேற்கொண்ட ஒருவன் ..
அவனே "நான்" எனும் ஆன்ம உணர்வு .. அதன் வழி காரியங்கள் நடக்கின்றன.
இதைப் புரிந்து செல்லும் பக்குவத்திற்கு நாம் வர வேண்டும்.
துன்பம் எதனால் வருகிறது என்ற கேள்விக்கு ஒரு பதில் " நான் " எனும் சிந்தை கொள்வதால்.
அதை நாம் கண்ணால் காண முடியாது.
ஆக துன்பம் இல்லை என்றாகிறது.
அடுத்து , நாம் நடைமுறையில் இந்த உலகம் நமக்கு ஏற்ப இல்லாததால் கஷ்டம் வருகிறது என்கிறோம்.
இது ஒரு தன் முனைப்பு ( CONSCIOUSNESS ) சார்ந்த சிந்தனை.
உலகில் தன் முனைப்பு என்பது ஒன்றுதான். இதோடு மற்றெதுவும் சம்பந்தமாகி வராது.
தன முனைப்பில் ஒருவன் இருக்க அங்கு துன்பபடுகிறவன் என்று ஒருவனும் இல்லையே.
காட்டு விலங்குகள் தங்கள் கஷ்டங்கள் உணர்வதில்லை, இறப்பை எண்ணி வருத்தமாவதில்லை. அந்த வாழ்வை தங்களுக்கு ஒரு அனுபவமாக பார்த்து பிறந்து வளர்ந்து மடிகின்றன.
அதுபோல்தான் நாமும். ஆன்ம இயக்கங்களில் வாழ்கிறோமேயன்றி நாம் கொண்ட உடலாலும் , மதியாலும், நான் என்ற பெருமையாலும் , உலகம் நமக்களிக்கும் என்ற நம்பிக்கையாலும் இல்லை.
நமக்குள் இருக்கும் நான் எனும் ஆன்ம சிந்தையை சரியாகத் தெளிந்தால் ..அதுவே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து அந்த இடத்திற்கே போயமரும் தன்மையை உணரலாம்.
இதை உணர வைக்காமல் காணாத கடவுளை இருப்பதாகச் சொல்லி ,வேறு எங்கிருந்தோ நமக்கு இடர் படைக்கப் பட்டு வருவதாயும், பின்னர் கடவுளை வேண்டினால் அது அகன்று விடுவதாயும் முன்னவர் வெகு காலமாய் நம்மை மூளைச் சலவை செய்து
வந்துள்ளனர்.
இந்த அளவில் படித்து வர , எனது நினைவு , " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற தமிழ்க் கூற்றை நினைத்தது.
சுருக்கமான உண்மையில் வைக்க வேண்டுமானால் நம்மை .. அதாவது நம்முள் இருக்கும் நான் (CONSCIOUSNESS )எனும் சிந்தையை சரியாக உணர்ந்து செயல்பட்டாலே துன்பமும், மரணமும் நம் சிந்தையை விழுங்காது.
கடவுளும், வழி நடத்தும் குருவும் , தன் முனைப்பு சிந்தனையும்( CONSCIOUSNESS ) ஒன்றே என அறிக. .
இவை நம் கண்களுக்குப் புலனாவதில்லை.
நடைமுறை வாழ்வில் ஆண்டனுபவித்த பெரியவர்கள் சிலர் தங்களது இறுதிப் படுக்கையில் வரும் மரணத்தை , மன நிறைவோடு எதிர்கொள்ளும் விதம் மனக்கண்ணில் நிழலாடிற்று.
( என்னால் முடிந்தவரை தமிழாக்கத்தில் )
கோதைதனபாலன் 

No comments:

Post a Comment