Tuesday, January 31, 2012
அனுபவ முத்திரைகள்: சிவன் போற்றுதல்
அனுபவ முத்திரைகள்: சிவன் போற்றுதல்: தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைபவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே ...
சிவன் போற்றுதல்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைபவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே
.......திருமந்திரம்.
ஐம்புலன்களையும் வென்ற ஞானிகள் தங்கள் முன் வினையினால் வந்த பலன்களை களைந்து சிவனடி போற்றி விலகாது நிற்கும் நிலை எய்துவர். சராசரி மனிதன் சுபாவங்கள், மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நீரோடை போன்றது. அவரவர் திசைதிருப்பி பலனடைய ஏதுவான ஒன்றே. எனவே தாங்கள் தங்களிடம், தங்களை சுற்றி குவிந்திருக்கும் சிற்றியல்புகளில் நாட்டம் கொள்ளாது நீரோடை போன்ற தங்கள் மனவோட்டத்தை ஈசன் பால் திருப்பி அவன் சிந்தை அகலாது இருத்தலே தங்கள் வினை தீர்க்கும் மார்க்கம் என அறிதல் வேண்டும்.
கோதைதனபாலன்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைபவர்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே
.......திருமந்திரம்.
ஐம்புலன்களையும் வென்ற ஞானிகள் தங்கள் முன் வினையினால் வந்த பலன்களை களைந்து சிவனடி போற்றி விலகாது நிற்கும் நிலை எய்துவர். சராசரி மனிதன் சுபாவங்கள், மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நீரோடை போன்றது. அவரவர் திசைதிருப்பி பலனடைய ஏதுவான ஒன்றே. எனவே தாங்கள் தங்களிடம், தங்களை சுற்றி குவிந்திருக்கும் சிற்றியல்புகளில் நாட்டம் கொள்ளாது நீரோடை போன்ற தங்கள் மனவோட்டத்தை ஈசன் பால் திருப்பி அவன் சிந்தை அகலாது இருத்தலே தங்கள் வினை தீர்க்கும் மார்க்கம் என அறிதல் வேண்டும்.
கோதைதனபாலன்
Thursday, January 26, 2012
அனுபவ முத்திரைகள்: வள்ளலார்
அனுபவ முத்திரைகள்: வள்ளலார்: அருளமு தெனக்கே யளித்தெரு ணெறிவாய்த் தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ் சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே ...
வள்ளலார்
அருளமு தெனக்கே யளித்தெரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்கு கின்றாற்கு
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவரு நெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெல்லாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெல்லாம் விடுகெனச் செப்பிய சிவமே..
.... ராமலிங்க அடிகளார்
நினது அமுதமான அருளை எனக்கீந்து என்னுள் நன்னெறி தன்னை வளர்க்கும் சிவமே !எனது உடலில் இயங்கும் சக்தியில் எல்லாமும்,எனது சித்தமெல்லாமும் நீயும் ஒரு அங்கத்தோடு அங்கமாயென்னை யாண்டு வருகிறாய். இயற்கையின் படைப்பில் ,எல்லா உயிரில் கருணை எங்கெல்லாம்,எப்படியெல்லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாமும் நீயே வியாபித்திருக்கிறாய். எத்தகையவர் ஆயினும் அவர்தம் மீது இரங்கும் மனதினருக்கு எல்லாச் சிறப்பும் ,செல்வமும் சிதம்பரத்தில் உறையும் சிவமே நீ அளிக்கிறாய்.
பொய்மையான , மாயம் நிறைந்த பாதையில் என் மனம் போகா வண்ணம் என்னுள் புகுந்து நன்னெறியில் என்னை செலுத்தும் சிற்சபை கொலுவிருக்கும் சிவமே...
உயிர் வதை செய்யாதிருப்பதே குரு போற்றும் அருள்நெறி என்று பலகாலும் உணர்த்தும் மெய்ப்பொருளே.. இதனால் எல்லா உயிர்களையும் மனதார ஒன்று போல் பார்க்கும் மனத் திண்மையை பெறவைத்து யாவருக்கும் அதை எடுத்துச் சொல்லுதல் முறையே எனக் கூறும் சிவமே...
என்றெல்லாம் சொல்லி வருகிறார்.. இது
‘அருட்பெருஞ்சோதி அகவல்’
கோதைதனபாலன்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்கு கின்றாற்கு
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவரு நெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெல்லாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெல்லாம் விடுகெனச் செப்பிய சிவமே..
.... ராமலிங்க அடிகளார்
நினது அமுதமான அருளை எனக்கீந்து என்னுள் நன்னெறி தன்னை வளர்க்கும் சிவமே !எனது உடலில் இயங்கும் சக்தியில் எல்லாமும்,எனது சித்தமெல்லாமும் நீயும் ஒரு அங்கத்தோடு அங்கமாயென்னை யாண்டு வருகிறாய். இயற்கையின் படைப்பில் ,எல்லா உயிரில் கருணை எங்கெல்லாம்,எப்படியெல்லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாமும் நீயே வியாபித்திருக்கிறாய். எத்தகையவர் ஆயினும் அவர்தம் மீது இரங்கும் மனதினருக்கு எல்லாச் சிறப்பும் ,செல்வமும் சிதம்பரத்தில் உறையும் சிவமே நீ அளிக்கிறாய்.
பொய்மையான , மாயம் நிறைந்த பாதையில் என் மனம் போகா வண்ணம் என்னுள் புகுந்து நன்னெறியில் என்னை செலுத்தும் சிற்சபை கொலுவிருக்கும் சிவமே...
உயிர் வதை செய்யாதிருப்பதே குரு போற்றும் அருள்நெறி என்று பலகாலும் உணர்த்தும் மெய்ப்பொருளே.. இதனால் எல்லா உயிர்களையும் மனதார ஒன்று போல் பார்க்கும் மனத் திண்மையை பெறவைத்து யாவருக்கும் அதை எடுத்துச் சொல்லுதல் முறையே எனக் கூறும் சிவமே...
என்றெல்லாம் சொல்லி வருகிறார்.. இது
‘அருட்பெருஞ்சோதி அகவல்’
கோதைதனபாலன்
Tuesday, January 24, 2012
அனுபவ முத்திரைகள்: திருமூலர் திருமந்திரம்
அனுபவ முத்திரைகள்: திருமூலர் திருமந்திரம்: நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ....
திருமூலர் திருமந்திரம்
நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ..... திருமந்திரம்
உலகத்தில் மனிதனுக்கு சுக ,துக்கங்கள் மாறி மாறி வருவதுவே இயற்கையின் நியதி. ஒன்றில்லாமல் ஒன்று வருவதில்லை. அவ்விதம் வந்தக்கால் நம் மனதை அது சுகமாயினும் சரி,துக்கமாயினும் சரி ஒரே நடுவு நிலைமையான உணர்வில் வைத்து எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்சி இருத்தல் வேண்டும்.அப்படி நின்றவர்க்கு அறிந்திட வேறு ஞானம்ஏதும் இல்லை. என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்க்கு நரகம் இல்லை.இன்பம் வந்தக்கால் அதுவே நிலை என்று இறுமாந்திராமல் துன்பத்தையும் மறவாது சமமாக பாவிக்கத் தெரிந்தவன் தேவருக்கு சமமாகிறான். அந்தப் புனிதமான நடுவு நிலைமை காட்டும் வழியிலே நானும் பரம்பொருளே உன்னை இறைஞ்சி நிற்கிறேன்.
கோதை தனபாலன்
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ..... திருமந்திரம்
உலகத்தில் மனிதனுக்கு சுக ,துக்கங்கள் மாறி மாறி வருவதுவே இயற்கையின் நியதி. ஒன்றில்லாமல் ஒன்று வருவதில்லை. அவ்விதம் வந்தக்கால் நம் மனதை அது சுகமாயினும் சரி,துக்கமாயினும் சரி ஒரே நடுவு நிலைமையான உணர்வில் வைத்து எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்சி இருத்தல் வேண்டும்.அப்படி நின்றவர்க்கு அறிந்திட வேறு ஞானம்ஏதும் இல்லை. என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்க்கு நரகம் இல்லை.இன்பம் வந்தக்கால் அதுவே நிலை என்று இறுமாந்திராமல் துன்பத்தையும் மறவாது சமமாக பாவிக்கத் தெரிந்தவன் தேவருக்கு சமமாகிறான். அந்தப் புனிதமான நடுவு நிலைமை காட்டும் வழியிலே நானும் பரம்பொருளே உன்னை இறைஞ்சி நிற்கிறேன்.
கோதை தனபாலன்
Monday, January 23, 2012
அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்
அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்: கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. ! இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...
தாயுமானவர் பாடல்
கைவிளக்கின் பின்னே போய்க்
காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய்
மெய் காண்ப தெந்நாளோ .. !
இது தாயுமானவர்
சிவனை நினைத்து பாடிய வரிகள்.
கைவிளக்கு கொண்டு இருள் நீக்கி அடியெடுத்து பாதை ஒன்று காண முயலுவது போல் மனசாட்சி என்னும் உண்மை விளக்கோடு, இருள் போன்ற பல சுக துக்கங்கள் நிறைந்த வாழ்வில், எல்லாவற்றிர்க்கும் உண்மை பொருளானவனே உன்னை தேடி வருகிறேன்.. நீ விரைந்து என்னை ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ..!
காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய்
மெய் காண்ப தெந்நாளோ .. !
இது தாயுமானவர்
சிவனை நினைத்து பாடிய வரிகள்.
கைவிளக்கு கொண்டு இருள் நீக்கி அடியெடுத்து பாதை ஒன்று காண முயலுவது போல் மனசாட்சி என்னும் உண்மை விளக்கோடு, இருள் போன்ற பல சுக துக்கங்கள் நிறைந்த வாழ்வில், எல்லாவற்றிர்க்கும் உண்மை பொருளானவனே உன்னை தேடி வருகிறேன்.. நீ விரைந்து என்னை ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ..!
Thursday, January 19, 2012
Saturday, January 14, 2012
அனுபவ முத்திரைகள்: உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்
அனுபவ முத்திரைகள்: உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்: உத்திரகோசமங்கை ஆ திசிதம்பரனார் அலங்காரத்தில் உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் காணும் நினைவு மனதில் பல வருடங்கள் புதைந்து க...
உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்
![]() |
உத்திரகோசமங்கை |
![]() |
ஆதிசிதம்பரனார் |
![]() |
அலங்காரத்தில் |
இது ஆதி சிதம்பரனார் கோயில். ஆகாயம் மகிமை சொல்லும் சிவன் எழுந்தருளியுள்ளார் . இங்குள்ள நடராஜர் சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டது. வருடம் பூராவும் சந்தனக் காப்பில் இருக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரமன்று சுமார் இருபதுக்கும் மேலான அபிஷேகம் நடைபெறும். தயிர், மாவு அபிஷேகம் போது கயிலாயநாதனை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது. மற்றைய நாளிலோ ,மாதத்திலோ இவை கிடையாது. அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்வர். இதைக் காணவே பெருந்திரளான கூட்டம் அலைமோதுகிறது. நாங்கள் இடிபாட்டுடன் சிறப்பினராகவே உள நுழைந்த போதும் அமர்ந்தநிலையில் அபிஷேகம் பல கண்டபிறகு, சற்று முன்னேறி உள்ளே சந்நிதியில் நின்றவாறே அலங்காரம் ,தீபாரதனை காணுமுன்....சிவ நாமங்கள் பல சொல்லியும் , பலர் சொல்லக்கேட்டும் இருந்த நிலையை எண்ணும்போது,கால்நரம்புகள்,சதைகள் ரத்தம் சுண்டியதுபோன்ற உணர்வுடன் வலிமை குறைந்த நிலையில், 'தென்னாடுடைய சிவனே போற்றி'என்ற அந்த சிவன் நாமமே நாவில் வென்று நின்றது. எங்கும் எதிரொலித்தது. ஆமாம் பற்றறுத்து வந்து நிற்பவரைத்தானே சிவன் மகிழ்வுடன் ஏற்கிறான்...என்று நாயன்மார்கள் சொல்லி பாடுவது உணர்ந்தேன்..மனம் நெகிழ்ந்தேன்...
இது சமயமே ராமநாதபுரம் ராணி, வீட்டார் உள்நுழைகின்றனர். இதற்குள் உற்சவருக்கு அபிஷேகமும் ,அலங்காரமும் முடிகிறது. தீபார்த் தனைக்கு முன்னதாக முறையே பசுமாடு அழைத்து வரப்பட்டு அதற்கு வஸ்திரம் .பூமாலை சார்த்தப்பட்டு தீபம் காட்டி ,திரைசீலை சற்று பாதம் மட்டுமே தெரியும் படியாக விலக்கி அதற்கு காட் டப்படுகிறது.பின்னர் இதுபோன்றே வரிசையாக சிறுவன் ஒருவன்,சிறுமி ஒருத்தி,அர்ச்சகரில் ஒருவர் பின்னர் இறுதியாக ராணி அம்மையாருக்கு காட்டப்பட்ட பிறகே தீபாரதனை வெகு சிறப்பாக காட்டப்பட ஆருத்ரா தரிசனம் முழுமை அடைகிறது. மரகத நடராஜர் ,பொன்னிற உடலில் புலித்தோ லொத்த உடையை அரைக்கிசைத்து காட்சி தருதல் கண்கொள்ளா காட்சி.
வெளி மண்டபத்தில் நடராஜர் வெண்மை கோலத்தில் பார்வதி சம்மேளராய் காட்சியளிக்கிறார்.
மரகதநடராஜர் அலங்காரம் காலை சிலமணி நேரங்களே இருக்கும். பிறகு மறுபடியும் சந்தனக் காப்பிட்டு நடை மூடுவர், மறுபடியும் அடுத்த வருடமே இந்த வழிபாடு .
கோதைதனபாலன்
Subscribe to:
Posts (Atom)