Showing posts with label தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ... Show all posts
Showing posts with label தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ... Show all posts

Monday, June 25, 2012

கந்தரலங்காரம்.




தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

............கந்தரலங்காரம். 

விசாலமான வெற்றியை உடைய முருகப் பெருமானின் மயிலே !உலகினில் துன்பங்கள் நீங்கும் பொருட்டு உன்னை முருகப் பெருமான் செல்ல விடுவாரானால் வாடா திசையில் உள்ள மேரு மலைக்கு அப்பாலும்,சூரியனுக்கு அப்பாலும்,பொன்மயமான சக்ரவாள மலைக்கு அப்பாலும் ,எட்டு திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய்